Sunday, February 16, 2014

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் தொடர்கிறது!


போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தம்மிக்க பெரேராவுடன் இன்று மாலை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எவ்விதமான தீர்மானமின்றி நிறைவு பெற்றமையினால் ரயில் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் கே.ஏ. கொத்தசிங்க தெரிவித்தார்.

இதேவேளை ஓய்வு பெற்ற ரயில் சாரதிகளை ஒப்பந்த அடிப்படையில் இணைந்து கொண்டு ரயில் சேவைகளை சீரான முறையில் முன்னெடுப்பதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பீ.ஏ.பி ஆரியரத்ன தெரிவித்தள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com