Thursday, February 13, 2014

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஜனாதிபதியைக் கொண்டு செல்ல முடியாது! - ஜேவிபி

நெதர்லாந்தின் ஹேக் நகரில் இருக்கும் போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என ஜேவிபியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,.

போர்க் குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இலங்கை அதில் கையெழுத்திடவில்லை என்பதால், அப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாது.

இதனால் ஜனாதிபதியை மாத்திரமல்ல சாதாரண இராணுவ வீரரையும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றறத்திற்கு கொண்டுசெல்ல இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com