Tuesday, February 18, 2014

அரச மரத்தில் மாட்டிறைச்சியை தொங்கவிட்டு அறுத்க்கொண்டிருந்த ஐந்து பேர் கைது!

கம்பளை இறைச்சிக் கடையொன்றின் உரிமையாளர்கள் உட்பட ஐவர் ஒன்றிணைந்து அரச மரத்தில் இரண்டு எருமை மாட்டி றைச்சியை தொங்கவிட்டு அறுத்க்கொண்டிருந்தபோது கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தபோது ஐவரில் இருவரை 10,000 ரூபா ரொக்கப்பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்த நீதிபதி உபுல்ராஜகருண ஏனைய மூவரையும் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட் டார்.

கம்பளை மில்லகஹடுவ தெரியகம பகுதியிலிருந்த இரண்டு எருமை மாடுகளை அந்தக் கிராமத்தின் காட்டுப் பகுதியிலிருந்த அரச மரத்தில் தொங்கவிட்டு இரவு நேரத்தில் கொன்று, இறைச்சியை வெட்டி எடுத்த போது, கிராமவாசிகள் சுற்றி வளைத்து தப்பிச் செல்லாதவாறு காவலில் இருந்த பொலிஸாருக்கு தெரிவித்தனர். பொலிஸார் வந்து இந்த நபர்களைக் கைது செய்து கம்பளை நீதவான் நீதிமன் றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com