Wednesday, February 26, 2014

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!


இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டடுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி ஆலோசகரும் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால சிறி புத்தரகித மகாநாயக்க தேரர் யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன், ஜனாதிபதி ஆலோசகரும் பௌத்த விவகாரங்களுக்கான இணைப்பாளருமான உதுஹம ரத்னபால சிறி புத்தரகித மகாநாயக்க தேரிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று(26.02.2014)காலை வருகைதந்ந உதுஹம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகள், யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் உதயப்பெரேரா, நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரப்பரமாச்சாரிய ஞானதேசிக சம்பந்த சுவாமிகள் மற்றும் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆகியோரை நல்லை ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடிa போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com