Wednesday, February 26, 2014

சாய்ந்தமருதில் மர்ம வெடி பொருள்!

சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் அப்பகுதி மீனவர்களால் மர்ம வெடி பொருள் ஒன்று கரையொதுங்கியிருந்ததை அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்முனைப் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து பொலிசாரும் விசேட அதிரடிப் படைடினரும் புலனாய்வுப் பிரிவினரும் விரைந்து சென்று இந்த மர்மப் பொருள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

எனினும் அது குறித்து ஆய்வு செய்வதற்காகவும் மேலதிக நடவடிக்கைக்காகவும் அம்பாறையில் உள்ள விசேட அதிரடிப் படை குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடிப் படையினர் இந்த மர்மப் பொருள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் இது இந்தியாவில் பாவிக்கப்படும் கண்ணீர்ப் புகைக்குண்டாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டதுடன் தொடர்ந்தும் இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com