Thursday, February 20, 2014

இத்தாலியில் இலங்கையர்களை கொண்ட கொள்ளைக் குழு கைது

சிசிலியே நகரத்தை கேந்திர நிலையமாக கொண்டு எட்டு இலங்கையர்களை கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட குழுவை இத்தாலியின் சிசிலியே மெஷினா நகரின் கெரப்னேரி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அது மட்டுமல்லாது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளையிடப் பயன்படுத்தப்பட்ட கத்தி, இரும்பு கம்பி என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு இந்த கொள்ளைக் குழுவினர் மெஷினா நகரில் இலங்கையர் ஒருவரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டதாக முதல் முறையாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com