Thursday, February 20, 2014

சுவிட்சர்லாந்தில் முன்னாள் பெண் புலிக்கு நடாத்தப்பட்ட கற்பழிப்பு வகுப்பு பிசகியது! பீமன்

பிபிசி யில் கற்பழிக்கப்பட்ட நந்தினியின் உண்மைப் பக்கம் ஏது?

கற்பு என்பது முன்னொரு காலத்தில் தமிழ் பெண்களின் இல்வாழ்வுக்கான நல்லாயுதமாக கணிக்கப்பட்டதுடன், இது கள்வர் - காடையர்களால் அன்றில் ஏதோ ஒரு வழியில் அழிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அது பரம இரகசியமாக பேணப்படும். ஆனால், தமிழ்ப் பெண்களின் கற்பு தற்காலத்தில் மற்றவர் மீது பழிசுமத்துவதற்கான தீய ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. எது எவ்வாறு புனிதத்துடன் பேணிப்பாதுகாக்கப்பட்டதோ அது இன்று புலிகளின் ஊசலாடலுக்காக நயவஞ்சகத்தனமாக ஏலத்தில் விடப்பட, சம்பந்தப்பட்ட பெண் அவரது குடும்பத்தினர் கணவர் குழந்தைகள், வாழ்நாள் முழுக்க கறையைச் சுமந்து செல்கின்றனர்.

இதற்குச் சான்றான வரலாற்றுப் பதிவு ஒன்று இங்கு பொருத்தமாகுமென நினைக்கின்றேன்….

சமாதான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளுக்கு பயணம் செய்த புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவர் சுவிட்சர்லாந்திலுள்ள புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரிடம் காதல் வயப்படுகின்றார். இக்காதல் விவகாரம் தலைமைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. குறித்த புலி உறுப்பினருக்கு தகுந்த விசா இல்லாத காரணத்தால் தனது சகோதரனின் கடவுச்சீட்டில் இலங்கை சென்று காதலியை பதம் பார்த்து விட்டு வருகின்றார். காதலி கர்ப்பிணியாக சுவிட்சர்லாந்துக்கு அரசியல் தஞ்சம்கோரி வருகின்றார். சர்வதேச நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டேன், எனது வயிற்றில் வளரும் சிசுவுக்கு தகப்பன் யார் என்று தெரியாது. ஆனால் , இலங்கை இராணுவம்தான் தகப்பனாக இருக்க வேண்டும் என்று கதை புனையப்படுகின்றது. இந்தப் புனைவு எதற்காக புனையப்பட்டது? இலங்கை இராணுவத்தின் மீது பழி சுமத்துவதற்காகவா? அன்றேல், இலகுவாக வீசாவினை பெற்றுக்கொள்வதற்காகவா?

இவை இரண்டிலும் எது முதல்நிலைப்படுகின்றது என்ற வாதங்களுக்கு அப்பால், இன்று 8 வயதுச் சிறுவனாக துள்ளித்திரிகின்ற அவனின் உண்மையான தந்தை யார் என்று தாய்க்கும் தந்தைக்கும் தெரிந்தாலும் அவன் சமூகத்திற்கும் சுவிஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கு பிறந்த பையன்.

இலங்கை அரசின் மீது பழிசுமத்தவேண்டும் என்பதற்காக தமிழ் பெண்கள் அரசியல் தஞ்சம் கோரும்போது தாம் கற்பழிக்கப்பட்டோம் எனக்கூறுமாறு அறிவுறுத்தி ஏமாற்றும் மலிந்த இழிசெயல் நீண்டு செல்கின்றது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்துக்கு அரசியல் தஞ்சம் தேடி வந்த இலங்கை இராணுவத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட பெண் புலி ஒருவரிடம், இலங்கை அரசாங்கம் உங்களை கற்பழித்தது என்று கூறுமாறு அறிவுறுத்திய சம்பவம் பிசகிப்போயுள்ளது.

குறித்த யுவதி சுவிட்சர்லாந்துக்கு வந்து அரசியல் தஞ்சம் கோருவதற்கு முன்னர் எவ்வாறு தனது அரசியல் தஞ்சம் கோரலை கையாள்வது என வக்கீல் என்ற பெயரில் வலம் வரும் லுசன் பகுதியை சேர்ந்தவரிடம் ஆலோசனைக்காக சென்றபோதே மேற்படி பிசகல் எற்பட்டுள்ளது.

ஆலோசனை கேட்டுச்சென்ற யுவதியிடம் இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டேன் என்று கூறுங்கள் அப்போதுதான் வீசா தருவார்கள் என்றபோது, “வீசா தராவிட்டால் பாதிப்பேதுமில்லை அதற்காக எனது கணவனுக்கு உரித்தானதை என்னால் ஏலம்போட முடியாது” என்று கூறியுள்ளார் குறித்த யுவதி.

சுமார் 18 வருட காலங்கள் பிரபாகரனுக்கு மிகவும் அண்மையாக இருந்துள்ள மேற்படி பெண்புலி, தொடர்ந்தும் பிரபாகரன் மீது மையல்கொண்ட மனநோயாளிகளில் ஒருவராகவே காணப்படுகின்றார். பிரபாகரனுக்காக தங்களுடைய வாழ்நாளை தொலைத்துவிட்டோம் என விரக்தியடைந்திருக்கும் ஏனைய புலிகளிலும் வித்தியாசமானவராக இருக்கின்றார். “பிரபாகரன் இன்றும் தனக்கு வீரன்” என்கின்றார் இந்தப் பெண் புலி. லண்டனிலே பிபிசி யில் தோன்றி வீசாவுக்காக தனது அத்தனையையும் அம்பலத்தில்விட்ட தமிழ் யுவதிக்கு எதிர்மாறாக புலம்பெயர் புலிப்பினாமிகளின் வயிற்றுப்பிழைப்புக்கு நேரடிச்சவால் விடுத்து தமிழ் பெண்களின் தன்மானத்தை காத்துள்ளார் என்பது பாராட்டத்தக்கது.

புலம்பெயர் புலிகள் அரசியல் தஞ்சம் கோருகின்ற பெண்கள், கற்பழிக்கப்பட்டோம் என்று கூறிவிட்டால் சம்பந்தப்பட்ட அரசாங்கம் இலங்கை சென்று குறித்த இராணுவத்தினரை கைது செய்து வந்துவிடுவர் எனக் கனவு காண்கின்றனர். இலங்கை இராணுவத்தின் அத்தனைபேரும் இராமர்கள் என்றோ குற்றமிழைக்காதவர்கள் என்றோ நான் கூறிவிடமாட்டேன். பல்வேறுபட்ட குற்றமிழைத்த எத்தனையோ இராணுவத்தினர் இலங்கை இராணுவ வரலாற்றில் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் இன்று புலம்பெயர் புலிகள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் குற்றவாளிகளை தப்பவைக்கும் நடவடிக்கையே! உண்மையில் எவராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இலங்கையில் நீதி கோரவேண்டும். குற்றவாளிகளை கூண்டில் அடைக்க கூடிய பொறிமுறைகள் இலங்கையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும். மாறாக குற்றஞ் சுமத்தல் ஒன்றே போதுமானது என நினைக்கின்றார்கள்.

ஆனால், இலங்கை அரசாங்கம் இவர்களது குற்றச்சாட்டுக்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையா?

குற்றஞ்சாட்டுக்களை முன்வைக்கின்றவர்கள் அதனை நிரூபிக்கவேண்டும். நாங்கள் ஏன் எமது நேரத்தை அல்லது சக்தியை செலவிடவேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படை விதியின் பிரகாரம் மௌனம் காக்கின்றார்களா?

இல்லாவிட்டால், இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அரசிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்போவதில்லை மாறாக இவை, மேலும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடித்தரும் என்று கருதுகின்றார்களா?

என்ற பல்வேறுபட்ட கேள்விகள் எழுகின்றது. கடந்த மாதம் நந்தினி என்ற பெயரில் பிபிசி யில் தோன்றி யுவதி ஒருவர் தான் கற்பழிக்கப்பட்டதாக கதை கூறியுள்ளார். வீசாவினை பெற்றுக்கொள்வதற்காகவே அப்பட்டமான பொய்யை தனது மகள் கூறியுள்ளார் எனவும், தனது மகளின் மேற்படி செயலுக்காக வருந்துவதாகவும் நல்லூரடிப் பிரதேசத்தில் ஆசீர்வாதப்பர் வீதி யில் (சென் பெனடிக் வீதி) வசிக்கின்ற பெற்றோர் அயலவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையிலே இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கெடுக்க வந்திருந்த பிரித்தானிய பிரதமரிடம் குறித்த பெற்றோரை உண்மையின் சாட்சியங்களாக அழைத்துச்சென்று தங்களது நாட்டில் எமக்கு எதிராக திட்டமிட்ட பொய்குற்றச்சாட்டுக்கள் பரப்புரை செய்யப்படுகின்றது என்பனை நிரூபியுங்கள், பிரித்தானியாவின் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு டேவிட் கமருனிடம் விளக்கம் கேளுங்கள் என பல்வேறுபட்ட தேசப்பற்றுள்ள தரப்புக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தபோதும், அவ்விடயம் இடம்பெறவில்லை.

இதற்கான காரணம் - அதிகாரிகளின் திறமையின்மையா? இல்லையெனில், நாட்டினுள் வந்திருந்த விருந்தாளியை அவமதிக்கக்கூடாது என்ற இலங்கையின் விருந்தோம்பலின் அல்லது இராஜதந்திர பண்புகளின் வெளிப்பாடா?

கடந்த 09-11-2013 அன்று, பிபிசி தொலைக்காட்சியில் நந்தினி என்ற பெயரில் தோன்றிய யுவதி, தான் 2013 ஆண்டு ஆரம்பப்பகுதியில் தனது வீட்டிலிருந்தபோது வீடு தேடிவந்த இலங்கை இராணுவத்தினர் தன்னை வான் ஒன்றில் ஏற்றிக்கொண்டு சுமார் 4-5 மணித்தியாலயங்கள் ஓடிச்சென்று, இராணுவ முகாமொன்றில் வைத்திருந்து தொடர்ச்சியாக தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், தனக்கு ஓய்வே இருக்கவில்லை என்றும் எந்த நேரமும் ஓட்டிக்கொண்டே இருந்தார்கள் என்றும், ஓட்டியவர்களின் எண்ணிக்கையே தன்னால் சொல்ல முடியாது என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதியை தொலைக்காட்சியில் கண்ட ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

இவரது தந்தையார் பெயர் முத்துராசா. யாழ் மாநகர சபையில் வேலை செய்திருக்கின்றார். யாழ் நல்லூரடிப் பிரதேசத்தில் ஆசீர்வாதப்பர் வீதி (சென்பெனடிக்ட் ஸ்றீர்) வசித்து வருகின்றார்.

நந்தினியின் உண்மையான பெயர் நளாயினி. லக்கி என்றும் அவர் அழைக்கப்பட்டிருக்கின்றார். விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் படித்தவர். வன்னியையோ அன்றேல், யுத்தத்தின் வடுக்களையோ கண்டவர் என்று கூடக் கூறமுடியாது.

நளாயினிக்கும் - யூகன் பத்மராசா என்பவருக்கும் 2008 இல் திருமணப்பேச்சு முற்றுப்பெற்றுள்ளது.

யூகன் 2003 ஆண்டிலிருந்து லண்டனில் வசிக்கின்றார். ஆனால் இவர் லண்டனில் தங்குவதற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் திருமணப் பேச்சு முடிவுற்றதிலிருந்து நளாயினி கொழும்பிலேயே தங்கியிருந்திருக்கின்றார். அதற்கும்மேலாக மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சட்டவிரோத முகவர்கள் மூலம் பிரித்தானியாவிலுள்ள தனது வருங்கால கணவனுடன் இணையும் நோக்கில் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று வந்திருக்கின்றார்.

2013 முற்பகுதியில் இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, மாணவர்களுக்கான விசாவை பெற்றே இவர் பிரித்தானியா சென்றார் என்று சொல்லப்படுகின்றது. (என்றாலும், இதை ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியவில்லை)

இலங்கை மூன்று தசாப்தகால கொடிய பயங்கரவாதத்தை கொடுப்பதற்கரிய விலையை கொடுத்து தோற்கடித்திருக்கின்றது. அங்குள்ள மக்கள் அதன் கொடுமையிலிருந்து இன்னும் மீண்டவர்களாக இல்லை.

இக்கொடுமைகளிலிருந்து மீள அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகள் தேவைப்படுகின்றது. அவர்கள் தொழில்வாய்ப்பின்றி பசி பட்டினியால் வாடுகின்றனர். இந்த துயர் நிலை நீங்கவேண்டுமாயின் நிச்சயமாக இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். ஆனால், அவ்வாறு முதலீடு செய்ய முயற்சிக்கின்றவர்களை தமது சொந்த இலாபங்களுக்காக , தமது ஊசலாடலுக்காக புலிகள் தமிழ் மக்களை தவறாக வழிநடாத்தி, பல்வேறுபட்ட போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு தடுக்கின்றனர்.

இச்செயற்பாடுகளால் குறித்த ஒரு சிலருக்கு அந்தந்த நாடுகளில் வாழ்வதற்கு சிலநேரம் அனுமதி கிடைக்கலாம். அனால், இலங்கையிலே அல்லற்படுகின்ற மக்களுக்கும் உதவி வேண்டி நிற்கின்ற மக்களுக்கும் கிடைக்கபோவது என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இப்போலிப்பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு அந்தந்த நாடுகளில் இருக்கின்ற இலங்கை தூதரகங்கள் நேர்த்தியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொண்டுள்ளதாக இதுவரை அறியமுடியவில்லை. குறித்த யுவதி, பிரித்தானியாவிலே பகிரங்கமாக தோன்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றார் என்றால், பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்தூதரகம் செய்யவேண்டியது - யாழினி இலங்கைக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கின்றார் என்றும் இவரது குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றும் பிரித்தானிய நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து யாழினி கற்பழிக்கப்பட்டார் என்பதை நிரூபிக்குமாறு கட்டளையிடுவதற்கான ஆவன செய்ய வேண்டும். அவ்வாறு நிரூபிக்க மூடியாது போனால், அவர் பொய்குற்றச் சாட்டுக்களை சுமத்தியிருக்கின்றார் என்றும் இவரது பொய்குற்றச்சாட்டுக்களை மக்களுக்கு எடுத்துச் சென்ற பிபிசி ஊடகச் சேவை தாம் ஒலிபரப்புச் செய்த செய்தியானது பொய் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

மேற்படி செயற்பாட்டை இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் செய்து முடிக்காதவரை இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தே செல்லும்.

எனவே, சாதாரணமாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமது வாழ்வை மேம்படுத்திகொள்வதற்காக ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தடைபோட முற்படும் சக்திகள் தோற்கடிக்கப்படவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

1 comments :

Arya ,  February 20, 2014 at 8:01 PM  

இதை விட இத்தமிழ் பெண்கள் பாலியல் தொழில் செய்தால் இன்னும் வசதியாக வாழலாமே, வேசி மகன் பிரபாகரனால் தமிழ் இனம் வெள்ளை காரனுக்கு கோப்பை , குண்டி கழுவும் இனமாக மாறி விட்டதுடன் இப்ப இப்படியான இழிவான வீசாவினை பெற்றுக்கொள்வதற்காக இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டேன் என பொய் சொல்லும் கேவலமான நிலைக்கு புலிகளால் பயன் படுத்தப் படுகின்றனர்.

வெளி நாடுகளில் இருக்கின்ற இலங்கை தூதரகங்கள் இதுவரை நேர்த்தியான நடவடிக்கைகள் எதுவும் மேற் கொள்ள வில்லை என்பது மிகவும் உண்மை, அவர்கள் புலன் பெயர் புலிகள் எதோ மனம் மாறி தங்களுடன் கருணா , கே பி மாதிரி வருவார்கள் என்ற நினைப்பில் உள்ளார்கள் , ஆனால் இந்த புலன் பெயர்ந்ததுகள் காலம் காலமாக இலங்கைக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து பெரும் வருமானம் பெற்றவர்கள், இப்ப மேற்கத்தைய உளவு நிறுவனங்களும் பணம் கொடுப்பதால் அவர்கள் அரசு நினைப்பது போல் வரமாட்டார்கள் , இன்னும் கடுமையாக செயல் படுகின்றனர், இச்செயல் பாட்டாளர்கள் ரகசியமாக இலங்கை சென்று வருகின்றனர் , அப்படியானவர்களை கைது செய்ய கூட துப்பில்லாமல் உள்ளது அரச புலனாய்வு பிரிவு , நாட்டுக்கு விசுவாசமானவர்கள் கொடுக்கும் தகவல்களையும் ஆலோசனைகளையும் கூட செயல் படுத்துவதில்லை.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com