Friday, February 14, 2014

பாலுமகேந்திரா உடலை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை : நடிகை மவுனிகா

இயக்குநர் பாலுமகேந்திரா மறைவு குறித்து நடிகை மவுனிகா மனம் திறந்துள்ளார். அவர், ‘’டைரக்டர் பாலுமகேந்திரா என் கணவர் ஆவார். கடந்த 1985-ம் ஆண்டு முதல் அவர் என்னுடன் தொடர்பு வைத் திருந்தார்.

14 வருடங்களுக்கு முன்பு (2000&ம் ஆண்டில்) நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அன்று முதல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். ஆனால் அவர் உடலை பார்க்க என்னை சிலர் அனுமதிக்கவில்லை.

பொதுவாக எல்லா 2-வது மனைவிகளுக்கும் நடக்கும் கொடுமைதான் இது என்றாலும், என்னால் இந்த கொடுமையை ஜீரணிக்க முடியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com