தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் விருப்பு இலக்கங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன!
எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பாளர் விருப்பு இலக்கம் வழங்கல் இன்று காலை நடைபெற்றது.
இதில் மேல்மாகாண சபைத் தேர்தலுக்கான விருப்பு இலக்கங்கள் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்ட செயலகங்களிலும் தென் மாகாணசபை விருப்பு இலக்கங்கள் மாத்தறை காலி ஹம்பாந்தோட்டை செயலகங்களிலும் வைத்து வழங்கப்பட்டது.
இதன் படி களுத்துறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 13 அரசியல் கட்சிகள் 9 சுயேட்சை குழுக்களினதும் என 550 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேட்சைக் குழுக்களினது 1247 வேட்பாளர்கள் விருப்பு எண்களை பெற்றுள்ளனர்.
0 comments :
Post a Comment