Wednesday, February 19, 2014

நாங்கள் தேர்தலில் தோற்போம்! - மங்கள

மார்ச் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் நிச்சயமாக நாங்கள் தோற்கடிக்கப்படுவோம் என, அக்கட்சியின் ஊடகப்பிரிவு முக்கிய உறுப்பினரும், தலைமைத்துவச் சபையின் உறுப்பினருமான மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டமொன்றின் போதே அவர் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்..

எதுஎவ்வாறிருந்தாலும், பிரச்சார நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்பதைத் தெளிவுறுத்துவதற்காக திட்டமொன்றை தீட்டியுள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பு வீதம் அதிகரிப்பதற்கான தேவையையும் அங்கு தெளிவுறுத்தியுள்ளார். தோல்வியைத் தழுவும் அபேட்சகர்களையும், வாக்கு வீத்த்தை அதிகரித்துக் கொள்ளவியலாத தொகுதிகளின் அமைப்பாளர்களை நீக்க வேண்டியதன் தேவை பற்றியும் அங்கு மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com