பிரிவினைவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்! - விமல் வீரவன்ச
பிரிவினைவாதத்தை தூண்டும் அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எந்தவொரு அமைப்பும் பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும் அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை ஈழக் கோரிக்கைக்கு எதிரான மக்கள் கருத்துக் கணிப்பாக கருதி மக்கள் வாக்களிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.எந்தவொரு நபரும் அரசாங்கத்தை மாற்றுவது குறித்து பகிரங்கமாக குறிப்பிட முடியும் அது தவறில்லை எனினும் நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை பிளவுபடுத்தக் கூடிய 13ம் திருத்தச் சட்டத்தின் சரத்துக்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment