க.பொ.த (சா/த) பரீட்சையில் விசேட சித்தி பெற்ற 41 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த வருடம் க.பொ.த சாதாரணதரத்தில் கணிதத்தில் விசேடசித்தி(A) பெற்ற 41 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாண்டிருப்பு கணிதவள நிலையத்தின் ஏற்பாட்டில் கணிதசிரோன்மணி ஆசிரியர் பி.நமசிவாயம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த மாணவர்கள் பிரதிக்கல்விப் பணிப்பளர் வி.மயில்வாகனம், கார்மேல் பாத்திமா கல்லலூரியின் உதவி அதிபர் எஸ்.புனிதன், உவெஸ்லி கல்லுரி பிரதி அதிபர் எஸ்.கலையரசன், கல்வியல் கல்லூரி உபபீடாதிபதி கே.துரைராஜசிங்கம் அகியோரால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படுவதை படங்களில் காண்கின்றீர்கள்.
கணிதசிரோன்மணி திரு நமசியவாயம் அவர்கள் சுமார் கடந்த 3 தசாப்தங்களாக பிரதேச மாணவர்கட்கு பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திவருவதும் இவரது கடின உழைப்பால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1 comments :
வாசன் சேரை இப்படத்தில் காண்பதில் ஒரு சந்தோஷமாக உள்ளது. நன்றி..
Post a Comment