Friday, January 31, 2014

கைக்குண்டுடன் தேரர் கைது!

கைக்குண்டுடன் தேரர் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊரகஸ்மங்சந்திப் பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றின் தேரர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரது வயது 30 என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேரரிடம் மேலும் கைக்குண்டுகளும் துப்பாக்கிகளும் உண்டா என்பது பற்றி பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுவருவதாக ஊரகஸ்மங்சந்திப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் குறித்த கைக்குண்டு தனக்குரியது அல்லது என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com