Wednesday, January 1, 2014

தாய்க்கும் சிசுவுக்கும் எமனாக வந்த டிப்பர் வாகனம்

ஏ – 9 வீதியின் ஆனையிறவுப் பகுதியில் இன்று (01.01.2013) நடைபெற்ற விபத்தில் முக்கொம்பன் பூநகரி பகுதியைச் சேர்ந்த செந்தூரன் சுலோகினி (வயது 22), செந்தூரன் கின்சிலி ( பிறந்து 27 நாட்களேயான சிசு) ஆகியன உயிரிழந்துள்ளதுடன் கணவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனையிறவுப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற புதுவருட ஆராதனைகள் முடித்துக்கொண்டு வீடு திரும்பி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் வாகனம் ஒன்று இவர்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகினறனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com