Wednesday, January 1, 2014

புது வருட ஆசி பெற்ற கதிர்காமம் சென்ற ஜனாதிபதி!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (31.12.2013) இரவு சரித்திரப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தில் உள்ள கதிர்காம தேவாயயம், கிரிவிகாரை, மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் என மதஸ்தலங்களுக்கும் சென்று சமய வழிபாடுகளில ஈடுபட்டதுடன் அங்கிருந்த மத குருமாரிடமும் புதுவருட ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

அது மட்டும்லாது சமய வழிபாட்டுக்கு வந்த ஜனாதிபதி அங்கு நின்ற பொது மக்ளுடன் சினேகபூர்வமாக உரையாடினார். இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com