Wednesday, January 1, 2014

சிறுமி மீது பாலியல் பலாக்கார முயற்சி: தடுத்து நிறுத்தி சண்டை போட்டதால் வீடு தீக்கிரை

வவுனியா, சுந்தரபுரப் பகுதியில் கடந்த 27ம் திகதி இரவு வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இவ் வீட்டில் வசிக்கும் வேலு தனலட்சுமியின் மூத்த மகள் இராணுவத்தில் இணைந்து கொண்டமையால் அவர்களது வீடு தீக்கிரையாக்கப்பட்டது என கூறப்பட்டாலும் அது உண்மை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வேலு தனலட்சுமி கணவன் இல்லாத காரணத்தினால் தனது பெண் பிள்ளைகளுடன் பக்கத்து வீட்டில் படுப்பது வழக்கம். அவ்வாறு படுத்திருந்த ஒரு நாள் அந்த வீட்டுக்காரரான 60 வயதுடைய கோவிந்தராஜ் என்பவர் 15 வயதுடைய தனலட்சுமியின் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற வேளை சிறுமி கத்தியதால் விவகாரம் தெரியவந்தது. இதனால் இரு பகுதியினருக்குமிடையில் சண்டை ஏற்பட்டது.

இந் நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கோவிந்தராஜின் 19 வயதுடைய மகனும் அவனது 15 மற்றும் 16 வயதுடைய நண்பர்கள் மூவரும் சேர்ந்து வீட்டை தீக்கிரையாக்கியுள்ளனர். இதனையடுத்து தந்தை கோவிந்தராஜ், அவரின் மகன் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com