Thursday, January 23, 2014

விபத்துக்களை குறைக்க பகலிலும் 'ஹெட் லைட்'கள் ஒளிரப்பட வேண்டும்- பொலிஸ்


பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகளை ஒளிர விடுவதன் மூலம் விபத்துக்களைக் குறைக்க முடியும் என்று வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் எனவே இன்று (23.01.2014) முதல் மேல் மாகாணத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகள் (ஹெட் லைட்) பகல் வேளைகளிலும் ஒளிரப்பட வேண்டும் என்ற நடைமுறையை அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மேல் மாகாணத்தில் நடைமுறை படுத்தப்படவுள்ள இந்த நடைமுறை வெற்றியளிக்கும் பட்சத்தில் இதனை சட்டரீதியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com