Sunday, January 5, 2014

போரை நிறுத்துமாறு இந்தியா பிரபாகரனை வலியுறுத்தியது ஆனால் அவர் அதை கேட்கவில்லை! மத்திய நிதி அமைச்சர்!

இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது போரை நிறுத்துமாறு இந்தியா பிரபாகரனை வலியுறுத்தி யது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றை க்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதியதலைமுறை டி.வி.யில் இடம்பெற்ற நிகழ்சி யொன்றில் பேசிய போதே அமைச்சர் சிதம்பரம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இன்றைய அரசியல் நிலை, சிவகங்கை தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தமிழக அரசின் தடை, லோக்சபா தேர்தல் கூட்டணி, ராஜீவ் படுகொலை, இலங்கை இறுதிக்கட்டப் போர் நிலவரம் பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் நிறுத்தவில்லை. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனும் ஒரே பிடிவாதத்துடன் போராடினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

போரை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடமும் பிரபாகரனிடமும் இந்திய அரசாங்கம் எவ்வளவு சொல்லியும் கடைசிவரை அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மரணமடைய நேரிட்டது. இந்தியா சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்' என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

மீனவர்கள் பிரச்சினையில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், இருதரப்பு மீனவர்களையும் அழைத்துப் பேசவும் இந்திய அரசு தயாராகவே உள்ளது. ஆனால் தமிழக அரசு அதற்கு தயாராகவில்லை. அதற்கான திகதியை இன்னமும் குறிப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை முடிந்து தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. விசாரிக்கப்பட வேண்டியவர்கள் இன்னமும் இருக்கிறார்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம்,

தற்போதைக்கு நிலவும் கருத்துக்கள் வாக்குமூலங்கள் அல்ல. பிற்காலத்தில் எழுந்த சிந்தனைகள். அவர்கள்தான் வழக்கைத் தொடர்ந்தார்கள். கார்த்திக்கேயன்தான் கருத்து சொல்ல வேண்டும். என்னால் கருத்துச் சொல்ல முடியாது என்றார்.

விசாரணையில், தீர்ப்பில், சந்தேகம் உள்ளது என்ற பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்து மறு விசாரணை நடத்தக் கோர வேண்டும். நிராபராதி என்று வரும் பட்சத்தில் அதை அரசு ஏற்றுக்கொள்ளும். அதற்காகத்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சிதம்பரம் மேலும் கூறியுள்ளார்.

1 comments :

Arya ,  January 8, 2014 at 1:35 AM  

அந்த வேசி மகனை காப்பாற்ற இந்த கக்கூசு இந்தியா நல்லாத்தான் முயற்சித்துள்ளது, அவனை வைத்து இலங்கையில் அமைதியின்மை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது , ஆனால் இலங்கையின் உண்மையான நண்பர்களான சீன , பாகிஸ்தானின் உதவியுடன் இம்முயற்சி தடுக்கப் பட்டுள்ளதுடன், இலங்கை அமைதியாக உள்ளது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்போர் அதனாலேயே அழிந்ததுக்கு பல உதாரணங்கள் உள்ளது , பிரேமதாச உட்பட.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com