Saturday, January 25, 2014

ஆஸி பிரதமர் பயணித்த விமானம் கொழும்பில் தரையிறக்கம்; பிரதமர்,வெளிநாட்டு அமைச்சர், நாமல் ராஜபக்ஸ சந்தித்து பேச்சு!

அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் பயணித்த விமா னம் எரிபொருள் நிரப்புவதற்காக கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று நேரத்திற்கு தரையிறக்கப்பட்டதாக இலங்கைக்கான அவுஸ் திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பும் வழியில் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய, அவுஸ் திரேலிய பிரதமர் டோனி அப்போட்டை, இலங்கை பிரதமர் டி.எம். ஜயரட்ன மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ, நாமல் ராஜபக்ஸ ஆகியோர் சம்பிரதாய அடிப்படையிலும் மரியாதை நிமித்தமும் விமான நிலையத்தில் சந்த்தித்து உரையாடியதுடன் சற்று நேர ஓய்வுக்குப் பின் உடனடியாகவே அவர் புறப்பட்டுச் சென்றார் எனவும் தெரியவருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com