Saturday, January 25, 2014

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் விரைவில் கைதிகளை பரிமாற்றம்!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு ஈரானிய கைதிகளை அந்நாட்டுக்கு அனுப்பி வைத்து, ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பன்னிரெண்டு இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைப்பத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரானிய கைதிகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் அடிப்படையில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதே சமயம் ஈரானில் தொழில்களில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் பெளத்த மத வழிபாடுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்ய்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே விரைவில் கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் விரைவில் ஒப்பந்தமொன்று ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com