Thursday, January 9, 2014

திருமலை துறைமுகத்திற்கு வந்த புத்தகக் கண்காட்சிக் கப்பலை தேசியக் கொடியசைத்து வரவேற்ற மாணவர்கள்!

திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறைமுகத்தில் உலகின் மாபெரும் நடமாடும் புத்தகக் கண்காட்சி கப்பல் ஆன லோகோஸ் ஹோப் 60 உலக நாட்டைச் சேர்ந்த 400 உதவியாளர்களுடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் வந்தடைந்த கப்பலை பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து இலங்கை தேசியக் கொடியை அசத்தியவாறு வரவேற்றனர்.


9 தட்டுக்களைக் கொண்ட இக்கப்பலில் 5000 வகையான புத்தகங்கள் உள்ளதாக இதன் இணைப்பாளரான இந்தோனேசியாவைச் சேர்ந்த கிறிஸ்தோகோபர் தெரிவித்ததுடன் இந்தக்கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் தங்கியிருக்கும் என தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com