Sunday, January 19, 2014

பணிகளை தொடங்கியது ஆணைக்குழு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக் கப்பட்ட ஆணைக்குழு அதன் விசாரணைகளை நேற்று முதல் வடக்கில் ஆரம்பித்தது.கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம தமிழ் கலவன் பாடசாலையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள் நேற்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்றன.

நேற்றைய விசாரணைக்கு ஸ்கந்தபுரம், அக்கராயன் குளம், கண்ணகைபுரம் ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த 35 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆணைக்குழுவின் தலைவர் மேக்ஸ்வெல் பரக்ரம பரங்கம, ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சுரண்யனா வித்யவத்னே, மனோ ராமநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் நடைபெற்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com