Wednesday, January 1, 2014

பரிதாப நிலையில் யாழ் மீனவக் குடும்பங்கள்- எமிலியாம்பிள்ளை


யாழ். மாவட்டத்திலுள்ள மீனவக் குடும்பங்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க சமாசத்தின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினர்களிடமும் பல தடவைகள் கலந்துரையாடியபோதும் எந்தவித முடிவுகளும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

இதனைவிட எதிர்வரும் 20ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பில் வடபகுதி மீனவச் சங்கங்களுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படாதது வேதனை தருகின்றது எனத் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com