Monday, January 27, 2014

மட்டு. மிருகங்களை வேட்டையாடிய 13 அடி முதலை சிக்கியது (படங்கள்) !!

மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் 13 அடி முதலை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி-1 - தி.எஸ். ஊர் வீதி ஆற்றங்கரை கரையோரப் பகுதியில் ஆடு, மாடு, நாய் போன்ற மிருகங்களை வேட்டையாடி வந்த, இந்த இராட்சத முதலையை, நேற்று வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியா லய அதிகாரிகள், பொலிசாரின் உதவியுடன் பிடித்தனர்.

இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இம் முதலைக்கு 12 வயது என்றும் இதனை வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மட்டு – மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

எது எவ்வாறு இருப்பினும் வைத்திய பரிசோதனையின் பின்னரே இம் முதலை இறந்த காரணத்தை கண்டறிய முடியுமென்று அவர்கள், சுட்டிக்காட்டினர்.











0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com