பயங்கரவாதத்தை எப்படி ஒழித்தீர்கள். எங்களுக்கும் சொல்லித்தாங்கோ! இலங்கையின் உதவியை நாடுகின்றது பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட, இலங்கை யின் உதவியை பாகிஸ்தான் பிரதமர் நாடியுள்ளார். 6 வது ஆசிய பாராளுமன்ற மாநாட்டில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியை சந்தித்த போதே பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இவ்வேண்டு கோளை முன்வைத்தார்.
இச்சந்திப்பு இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. பயங்கரவா தத்தை அழிப்பதில் இலங்கை பயன்படுத்திய தந்திரோபாயங்கள் மற்றும் திட்ட ங்களை பாகிஸ்தானுக்கு வழங்குமாறு பாகிஸ்தான் பிரதமரினால் இச்சந்திப்பின் போது வேண்டுகோள் முன்வைக்கப்ட்டது.
அத்துடன் இலங்கை கிரிக்கட் அணியை பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்வ தற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர், இலங்கை வீரர்களுக்கு தேவையான விசேட பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார். இதே வேளை இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயல்பாடுகள் தொடர்பாக பாகிஸ்தானின் பிரதி சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக், இலங்கையின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியிடம் பாராட்டிய தோடு தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.
0 comments :
Post a Comment