Saturday, December 7, 2013

மெக்சிக்கோவில் இலங்கையர்கள் ஐவர் கைது!

மெக்சிக்கோவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரு சிறுவர்களும் பெண் ஒருவரும் அடங்குவர்.

குறித்த ஹோட்டலில் இவர்கள் ஐவரும் கடந்த 4 நாட்களாக தங்கியிருந்துள்ளனர். 34 வயதான சந்திரிகா நிரோஷன், 31 வயதான தூரந்திங்க நிரோஷன், மற்றும் 27 வயதான சிவபாதம் மற்றும் 10, 5 வயதான சிறுவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு ஆவணங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது தம்மிடம் அவ்வாறான ஆவணங்கள் எதுவும் இல்லை என இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com