Wednesday, December 11, 2013

கழுத்துப்பட்டியைப் பயன்படுத்தி தற்கொலை செய்த மாணவி!!

காதல் தோல்வியால் மனமுடைந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வரக்காபொல – உடபாகே – தொரவக்க பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர்.பாடசாலை கழுத்துப் பட்டியை பயன் படுத்தி குறித்த மாணவி தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.வரக்காபொல பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட் டனர்.சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com