Monday, December 9, 2013

யாசூசி அகாஷி இலங்கை வந்தடைந்தார் !!

ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதியான யாசூசி அகாஷி நேற்று (08) இரவு இலங்கை வந்தடைந்துள் ளார்.நேற்று இரவு 7.45 மணியளவில் ஜப்பானிலிருந்து புறப்பட்ட யாசூசி அகாஷி இலங்கை விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள் ளார்.போரின் பின்னதான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான விஜயமாக இவரது விஜயம் அமையப்பெற்றுள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரச அதிகாரிகள், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.2002 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு விஜயம் செய்து வரும் யசூசி அகாஷியின் இந்த இலங்கை விஜயம் அவரது 23 வது விஜயம் என்பது குறிப் பிடத்தக்கது.அகாஷி 13 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com