Tuesday, December 10, 2013

முஸ்லிம் அடிப்படைவாதிகள் மனிதர்களின் கை கால்களை வெட்டுகிறார்கள்! – ஞானஸாரர்

கத்தோலிக்க சபையின் மூலம் வெளியிடப்படுகின்ற சஞ் சிகையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றி குறிப்பிட் டுள்ளதுடன், முஸ்லிம் அடிப்படைவாதிகள் உயிரோடுள்ள வர்களின் கை கால்களை வெட்டுகின்றனர் என குறிப்பிட ப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான செயல் என பொதுபலசேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கத்தோலிக்கர்கள் முஸ்லிம் அடிப்படை வாதிகளால் தாக்குதலுக்குள்ளாகின்றனர். அவர்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கையின் பாதுகாப்பை எதிர்பார்த்துள்ளனர் எனவும், இவர்கள் விடயத்தில் இலங்கையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது கடமை எனவும் ஞானஸார்ர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றிக் குறிப்பிடும்போது, எங்களை நாங்கள் சமுதாயத்தினிடையே பிளவினை ஏற்படுத்துபவர்கள் என்றும், பௌத்தர்கள் அடிப்படைவாதிகள் என்றும் ஒரு சிலரினால் குற்றம் சாட்டப்படுகின்றது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், கத்தோலிக்க சஞ்சிகை முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளவை பற்றி யாரும் கண்டுகொள்ளாமலிருப்பது மிகவும் விசனிக்கத் தக்கதாகும் என்றும் தேர்ர் குறிப்பிட்டுள்ளார்.

பிறநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தருவது தொடர்பில் இலங்கையர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும், பிறநாட்டு ஆக்கிரமிப்புக் காரணமாக பௌத்தர்கள் மிகவும் குறைந்தனர் எனவும், ஒழுக்கமற்ற மாற்றுமதங்களின் மூலம் இவ்வாறான சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன எனவும் ஞானசார தேர்ர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com