Friday, December 13, 2013

இலங்கை தொடர்பிலான பிரேரணையொன்று ஐரோப்பிய பாராளுமன்றில் நிறைவேறுகிறது!

நேற்று (12) ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பிலான யோசனையொன்று முன்வைக்கப்பட்டு அது வெற்றிபெற்றுள்ளது. கற்ற்றிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பூரணமாக இலங்கையினுள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வதைகள் துன்புறுத்தல்கள் தொடர்பில் வெளியாகின்ற அறிக்கைகள் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் யுத்த்த்தின் பின்னர் சமாதானத்தை நிலைநிறுத்துவது குறித்தும் வடக்கில் தேர்தல்கள் நடாத்தப்படுவதுகுறித்தும் தனது விருப்பினைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து வெளிவருகின்ற அறிக்கைகள் தொடர்பில் முழுமையான சுயாதீன ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஐரோப்பியப் பாராளுமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பிலான தகவல்களை ஐரோப்பியப் பாராளுமன்றின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் காணலாம்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com