“செத்சுவ மெதுர“வை திறந்துவைத்தார் ஜனாதிபதி!
உணவுப் பாதுகாப்பு மத்திய நிலையமான செத்சுவ மெதுர ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. மக்களுக்கு விஷம் அடங்காத போஷாக்குள்ள உணவை வழங்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் திறந்துவைத்தார். ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் நோக்கில் சம்போதி விகாராதிபதி சங்கைக்குரிய தரனாகம குசலதம்ம தேரரின் வழிகாட்டலில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இந்நிலையம் செயற்படுகின்றது.
செத்சுவ நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் அங்குள்ள விற்பனை கூடங்களுக்கு சென்று ஜனாதிபதி அவர்களுடன் நட்புறவு ரீதியாக உரையாடினார். ஜனாதிபதி அங்கு கருத்து தெரிவிக்கையில் 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை கட்டியெழுப்பும் யுகத்தில் விஷமற்ற உள்ளு}ர் உணவு பொருட்களினால் நாட்டை தன்னிறைவடைய செய்ய வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ் அரும் பணிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். கொழும்பு 7 ஸ்ரீ சம்போதி விகாரை வளவில் பிரதி ஞாயிற்று கிழமைகளில் செத்சுவ நிலையம் திறந்திருக்கும். சகல உள்நாட்டு உணவு பொருட்களையும் பாவணையாளர்களுக்கு இங்கு பெற்று கொள்ள முடியும்.
தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ முகாமொன்றும் இங்கு இடம்பெறும். போஷாக்கு தொடர்பாக பொது மக்களை அறிவுறுத்தும் நோக்கில் இணையத்தளம் ஒன்றும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளு}ர் உணவு பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பிரபல சமையற் கலைஞர் பப்ளிஸ் சில்வா, சுற்றுலாத்துறைக்கு வழங்கிய பங்களிப்பிற்காக பாலதுருகே சந்திரசிறி ஆகியோருக்கு ஜனாதிபதியினால் நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன. தேசத்திற்கு ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கி கொடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாரித்த பிரேரணை ஒன்றும் ஜனாதிபதியினார் கையளிக்கப்பட்டது.
பின்னர் பௌத்தயா தொலைக்காட்சி அலைவரிசையின் கட்டுப்பாட்டு பிரிவிற்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார். சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக உட்பட அமைச்சு அதிகாரிகள், முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரும் இதில் இணைந்திருந்தனர்.
0 comments :
Post a Comment