Saturday, November 2, 2013

மாத்தறையில் படை வீரருக்கு புதிய வீடு கையளிப்பு! (படங்கள் இணைப்பு)

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று பொறியியல் பிரிவின் படை வீரர் சப்பர் விஜேநாயக்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (01) தொட்டபொல மாத்தறையில் இடம் பெற்றது.

புதிய வீட்டுக்கான திறப்பு, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷவினால் இராணுவ வீரரிடம் கையளிக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவால் இவ் வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியுதவி அளிக்கப்பட்ட அதேவேளை இலங்கை கடற் படையினரால் நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் உப தலைவி திருமதி. இந்து ரத்னாயக்க,சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அப்பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com