Tuesday, November 12, 2013

பொதுநலவாயப் போட்டியில் வெற்றியீட்டியோரை கௌரவித்தார் ஜனாதிபதி!

2013 பொதுநலவாயத் தலைவர்கள் மாநாட்டை (CHOGM 2013) முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, சித்திரப் போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தன.அவற்றில் வெற்றிபெற்றோருக்கான சான்றிதழ்களும், பணப் பரிசில்களும் நேற்று திங்கட்
கிழமை (11) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஜனாதிபதி மாளிகையில் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பொதுநலவாய மாநாட்டின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

(கலைமகன் பைரூஸ், படங்கள் சுதத் சில்வா)


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com