Monday, November 4, 2013

அதிவேக வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் கைது!

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதியில் முச்சக்கர வண் டியில் பயணித்த ஒருவர் அதிவேக வீதியில் கடமையில் இருந்த அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப் பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிவேக வீதியில் முச்சக்கர வண்டிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கைதுசெய்யப்பட்ட மாவத்தேகம பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி பமுன்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள துடன் இவரை எதிர்வரும் 6ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com