Saturday, November 16, 2013

சவுதியில் ஏழு வருடங்களாக பணிபுரிந்த இலங்கை இளைஞர் திடீர் மரணம்!

சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த இலங்கையின் அம்பாறை – பொத்துவில் அல் இர்பான் பாடசாலை பகுதியைச் சேரந்த (வயது 26)அஸ்வர் முஹம்மட் என்ற இளைஞர் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பாக தெரியவருவதாவது கடந்த 13ஆம் திகதி இரவு ஆகாரத்தை முடித்துக்கொண்டு படுக்கைக்கு சென்றவர் மறுநாள் காலையில் எழும்பாததைகண்டு, சந்தேகமடைந்த நண்பர்கள் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போது வைத்தியர்கள் இவர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்ததை தொடர்ந்து சடலம், மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக சவூதி அரேபியாவில் வைக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் இவரின் மரணத்திற்கான வைத்திய அறிக்கை கிடைக்கப்பெறவில்லை தெரிவிக்கப்படுகிறது.

திருமணமானவரான அஸ்வர் முஹம்மட் கடந்த 7 வருடங்களாக சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com