Wednesday, November 27, 2013

வெள்ளைக் கொடியுடன் வந்த மக்களை சுட்டுக்கொன்ற பிரபாகரனை தேசிய தலைவராக விபரிக்கும் ஸ்ரீதரன் எம்.பி.- எஸ். பி.

ஸ்ரீதரனின் கருத்துக்கு முழு விளக்கம் கொடுக்கின்றார் திசாநாயக்க

109 வருடங்களின் பின்னர் ஜனநாயகத்தை அனுபவிக்கும் அவகாசத்தை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனவும் அரசியல் நோக்கில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படவில்லை எனவும் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.

தமிழ் தலைவர்களை கொலைசெய்த பிரபாகரனை சுதந்திர போராளி என்று விபரிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதையே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது :- பிரபாகரனை சுதந்திர போராளி எனவும் வீரர் எனவும் பிரபாகரன் பயங்கர வாதியல்ல என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீதரன் எம். பி. இவ்வாறு கூறுவதன் மூலம் வடக்கில் ஏன் இன்னும் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சரியான பதில் கிடைக்கும். தமிழ் தலைவர்களை கொலைசெய்த ஒருவரை ஸ்ரீதரன் எம்.பி. தேசிய தலைவராக விபரிக்கிறார். இந்த நிலையில் வடக்கில் இராணுவத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.

வடக்கில் மீள்குடியேற்றமோ எதுவித அபிவிருத்தியோ இடம்பெறவில்லை என்று ஸ்ரீதரன் எம்.பி. வாய்கூசாமல் கூறுவதை ஏற்க முடியாது. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த மக்கள் எங்கே என அவர் கேள்வி எழுப்பினார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வெள்ளைக் கொடியுடன் வந்த மக்களை பிரபாகரன் தடுத்து நிறுத்த முற்பட்டார். அதனையும் மீறிச் சென்றவர்களை பிரபாகரனின் ஆட்கள் சுட்டனர். பிரபாகரனின் சகாக்களின் துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து தப்பிய இளைஞர் ஒருவரே பிரபாகரன் இருக்குமிடத்தை கூறினார். வெள்ளைக் கொடியுடன் வந்த மக்களை சுட்டுக்கொன்றது குறித்து பிரபாகரனிடமே கேட்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாண சபை 6 மாதங்களே இயங்கியது. மாகாண சபை முறையை பிரபாகரன் எதிர்த்தார். பிரேமதாஸ புலிகளுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து போசித்தார். 1905 முதல் 109 வருடங்களாக மக்கள் பெற்றிராத ஜனநாயகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயிலான எமது அரசாங்கமே வழங்கியது. வட பகுதி தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிப்பர் என்று தெரிந்தும் வட மாகாண சபைத் தேர்தலை நாம் நடத்தினோம். ஒரு கள்ள வாக்காவது இத்தேர்தலில் இடப்படவில்லை.

வட பகுதி மக்களின் நகை நட்டுக்களை பிரபாகரன் பறித்துச் செல்லவில்லையா? கப்பம் பெறவில்லையா? சிறுபிள்ளைகளை கடத்தி படையில் இணைக்க வில்லையா? இவரைத் தானா சுதந்திரத்திற்கான போராளி என்கின்றார்கள். 109 வருடங்களின் பின்னர் வட பகுதி மக்களுக்கு ஜனநாயகத்தை அனுபவிக்க சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்ததை மறந்து பேசாதீர்கள்.

பல்கலைக்கழக மாணவர்களை பிரபாகரன் கடத்திச் சென்று கொன்றார். புலிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் வட பகுதி மாணவர்களுக்கு நன்மை ஏற்படவில்லையா? இதற்கு இராணுவமே பங்களித்தது.

நாம் அனைவரும் இலங்கையர் என்பதை உணர்ந்து செயற்பட பழக வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் நிலை உருவாக்கப்படுவதையே நாம் விரும்புகிறோம். எனவே இனவாதத்தை தூண்ட வேண்டாமென கோருகிறேன்.

கிளிநொச்சியில் சிங்கள பாடசாலையொன்று முன்னர் இருந்தது. அங்கிருந்த சிங்கள மக்கள் மீள கிளிநொச்சிக்கு செல்லவில்லை. எனவே சர்வதேச சமூகத்துக்காக தவறான பிரசாரம் செய்யாதீர்கள்.

வடக்கில் மக்களின் சனத்தொகை பெருமளவு குறைந்தது. இன விகிதாசார அடிப்படையிலே பல்கலைக்கழக கோட்டா வழங்கப்படுகிறது. சனத்தொகை கணிப்பீட்டின் மூலம் வடக்கில் சனத்தொகை குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பல்கலைக்கழக கோட்டாவும் குறைந்தது. எதிர்காலத்தில் வடக்கில் பாராளுமன்ற தெரிவும் குறைவடையும். அரசியல் நோக்கத்தில் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாவது குறைக்கப் படவில்லை. நாம் இனவாத ரீதியில் செயற்பட்டால் யாழ். பல்கலைக் கழகத்தையோ கிழக்கு பல்கலைக்கழகத்தை யோ முன்னேற்றியிருக்க மாட்டோம்.

பிரேமதாஸ, லலித் அதுலத் முதலி, காமினி திஸாநாயக்க போன்ற தலைவர்களை புலிகள் கொன்றதைப் பற்றி இல்லாமல் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், யோகேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களை கொன்றதைப் பற்றியே பேசுகிறோம்.

எனவே, வட பகுதி தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை சுதந்திரப் போராளிகளாக சித்தரிக்க வேண்டாம் என்று கோருகிறேன். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரேஇனமாக ஒற்றுமையாக வாழ்வதையே ஜனாதிபதி தலைமையிலான எமது அரசாங்கம் விரும்புகிறது.

8 comments :

Anonymous ,  November 27, 2013 at 7:08 AM  

பிரபாகரன் மற்றும் சில எம்பிக்கள் பற்றிய கருத்துகள் ஏற்றுக்கொள்ளகூடியது.
ஆனாலும், அடிப்படை உண்மையை எவரும் மறைக்க முடியாது.

அதாவது இலங்கையில் சகல மக்களும் சமமாக அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றதாயின் ஏன் பிரச்சனைகள் எழுகின்றது??

உதாரணமாக, பாராளமன்ற பதவிகள் உட்பட, அரசாங்க திணைக்களங்கள், இராணுவம், போலிஸ் போன்ற அரச பதவிகளில் எத்தனை விகிதமான தமிழர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்? சகல இனங்களும் சமமாயின் ஏன் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்? அத்துடன் இலங்கையில் சகல மொழிகளும் சமமாக் மதிக்கப்படுவதாயின் ஏன் தமிழில் தேசிய பாடலை பாட தடை செய்யவேண்டும்?
அதேபோல் சகல மதங்களும் சமமாக மதிக்கப்படுவதாயின் ஏன் கோவில்கள், பள்ளிவாயல்கள் திட்டமிட்டு இடிக்கப்பட வேண்டும்?

இதை புரிந்து கொண்டால் எமது நாட்டின் அடிப்படை பிரச்சனை எவருக்கும் தெளிவாக விளங்கும். தயவு செய்து அரசாங்க அமைச்சர்களுக்கு விளங்கபடுத்துங்கள்.

Anonymous ,  November 27, 2013 at 9:31 AM  

Very good answer, but Sritharan is treined LTTE member, so he always will say this, becouse he wil satisfied LTTE Diaspooras for getting most funds from them and have good living style in Kilinochchi.

Better for Sritharan that he should stop talking about LTTE and LTTE Prabaharan.

Problem for his is, LTTE Diasporas,will not support him and thay stop all suply of funds.

Sritharan wants get goverment salary this side ad NeXT from LTTE diasporas in black Money.

LTTE diasporas, need Sritharans help to make those kind of sounds, like everythink is comming on media. Then he is a hero for LTTE diasporas!

Newly, he went to Norway, where he got much black Money from Norwaygian LTTE Diasporas befor he left.

Anonymous ,  November 27, 2013 at 11:46 AM  

Hon.Minister need not to give exaplanation to the comments political rubbish

Arya ,  November 27, 2013 at 11:55 AM  

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானாவர்களை கைது செய்வது போல் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான MP களையும் கைது செய்வதற்கான சட்டங்களை திருத்த வேண்டும், இப்படியானவர்கள் மேல் தேச துரோக குற்றம் சுமர்த்தப்பட வேண்டும், இப்படியானவர்களுக்கு பாராளு மன்ற சிறப்புரிமையில் இருந்து விலக்கு அளிக்கப் பட வேண்டும் , கைது செய்து நடவைக்கை எடுக்க வேண்டும், அப்ப தான் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்த படை வீரர்களுக்கு அளிக்கும் உண்மையான கௌரவமாக இருக்கும்.

Arya ,  November 27, 2013 at 11:55 AM  

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானாவர்களை கைது செய்வது போல் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான MP களையும் கைது செய்வதற்கான சட்டங்களை திருத்த வேண்டும், இப்படியானவர்கள் மேல் தேச துரோக குற்றம் சுமர்த்தப்பட வேண்டும், இப்படியானவர்களுக்கு பாராளு மன்ற சிறப்புரிமையில் இருந்து விலக்கு அளிக்கப் பட வேண்டும் , கைது செய்து நடவைக்கை எடுக்க வேண்டும், அப்ப தான் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்த படை வீரர்களுக்கு அளிக்கும் உண்மையான கௌரவமாக இருக்கும்.

Anonymous ,  November 27, 2013 at 6:36 PM  

சிறிதரன் என்பவன் ஒரு பக்கா மோசடிக்காரன் மாத்திரமன்றி அவன் ஒரு பெண் பித்தன்! அவனுக்கு குழந்தை பெண்பிள்ளைகளைதான் ரொம்ப பிடிக்குமாம் அவண்ட கிளட்டுச் சாமானுக்கு! பொறுக்கி நாய்! ஜயோ கடவுளே இந்த பொம்புள பொறுக்கி காவாளி நாய பாராளுமன்றத்துக்குள்ள விட்டது யார்?
பிரபாகரன் எவ்வழியில் சென்றானே இந்த பொம்புள பொறுக்கியையும் அவ்வழியிலேயே அனுப்பவேண்டும்! புலம்பெயர் தமிழர்களின் பணத்தை சுறுட்டி பிழைப்பு நடத்தும் இவன் செய்த சுத்துமாத்து வேளைகள் எத்தனை எத்தனை!
ஏந்தவிதமான தயவும் பாராமல் இவனை பயங்கரவாத சட்டத்தின் கிழ் கைதுசெய்து பின்னர் பிரபாகரன் சென்ற இடத்திற்கு அனுப்பவேண்டும்

Anonymous ,  November 27, 2013 at 10:18 PM  

Sritaran is a hero for LTTE diasporas in Europe.

He have been in Norway for collect money from LTTE diasporas nearly.

He will collect black money from LTTE and LTTE diasporas then he will make a noice in Parliment!

He will never talk regarding LTTE terrorist vialonts!

He will live and his LTTE diasporas will live!

Mad Tamil people are payin for them all over the world,

This is only money subject. Sritharan olso for only money subject.

Mr.President want to give him black money in million amaunds, will Sritharan sing for this side!

There are politic only for money for most of all TNA. Basterds.

Arya ,  November 28, 2013 at 2:13 AM  

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானாவர்களை கைது செய்வது போல் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான MP களையும் கைது செய்வதற்கான சட்டங்களை திருத்த வேண்டும், இப்படியானவர்கள் மேல் தேச துரோக குற்றம் சுமர்த்தப்பட வேண்டும், இப்படியானவர்களுக்கு பாராளு மன்ற சிறப்புரிமையில் இருந்து விலக்கு அளிக்கப் பட வேண்டும் , கைது செய்து நடவைக்கை எடுக்க வேண்டும், அப்ப தான் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்த படை வீரர்களுக்கு அளிக்கும் உண்மையான கௌரவமாக இருக்கும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com