Friday, November 22, 2013

யாழில் தனித்திருந்த பெண்ணின் வீட்டில் கொள்ளை!

யாழ்ப்பாணம், அரியாலை கடற்கரை வீதியில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணின் தாலிக் கொடி மற்றும் தங்க ஆபர ணங்கள் நேற்று நள்ளிரவு திருடர்களினால் அபகரிக்கப் பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு அரியலை கடற்கரை வீதி தனித்திருந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற திருடர்கள் குறித்த பெண்ணின் வாய்க்குள் துணியை அடைத்துவிட்டு கழுத்தை நெரித்து, தாலிக் கொடியை அறுத்துச் சென்று ள்ளனர்.

இச்சம்பவத்தில் ம.இராசராணி (வயது 62) என்பவரே பாதிக்கப்பட்டவராவார். இவர் வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com