Sunday, November 3, 2013

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையின் 25வது ஆண்டு வெள்ளிவிழா டிசம்பர் மாதம் 14 திகதி - இஷாரத்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையின் 25வது ஆண்டு வெள்ளிவிழா பொது வைபவம் டிசம்பர் மாதம் 14ஆந் திகதி கோலாகலமாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறி சேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலை 1988 ஆம் ஆண்டு அப்போதைய முல்லை தீவு மாவட்ட அமைச்சராக இருந்த முன்னாள் வர்த்தக வாணிப அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரினால் பிரசவ விடுதியாக ஆரம்பிக்கப்பட்டு அமைச்சர் மன்சூரின் அழைப்பின் பேரில் 1988நவம்பர் 05ஆம் திகதி அப்போதைய சுகாதார அமைச்சர் ரேணுகா ஹேரதினால் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் அங்கத் தவர்கள் முன்னாள் அமைச்சர் மன்சூரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்கான நேர அனுமதியை பெற்றுக் கொடுத்துள்ளார்

டிசம்பர் 14ஆம் திகதி நடை பெறவுள்ள இவ்விழாவில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையின் ஸ்தாபகரும் கல்முனையில் கனவான் அரசியல் பணி செய்தவருமான முன்னாள் அமைச்சர் மன்சூர் உட்பட இந்த வைத்திய சாலை அபிவிருத்திக்கு அர்பணிப்பு செய்த அத்தனை பேரும் பாராட்டப்படுவ தோடு நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையின் வெள்ளி விழா வைபவத் தையொட்டி வைத்தியசாலையின் உட்கட்டுமான அபிவிருத்தி பணிகள் வைத்திய சாலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com