Friday, October 4, 2013

கள்ளக்கா தலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டியவருக்கு விளக்கமறியல்!

கள்­ளக்­கா­த­லியை தாக்கி, நிர்­வாண கோலத்தில் புகைப்­ப­ட­மெ­டுத்து, இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப் போவ­தாக அச்­சு­றுத்­திய வர்த்­தகர் ஒரு­வரை நீர்­கொ­ழும்பு பிர­தான நீதிவான் ஏ.எம்.என்.பி.அம­ர­சிங்க எதிர்­வரும் 15 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

நீர்­கொ­ழும்பு லுனு­கட சந்­தியில் அமைந்­துள்ள ஹார்ட்­வெயார் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான 26 வய­து­டைய ஒருவரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வ­ராவார். சந்­தேக நபர் தளு­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த 35 வயது­டைய திரு­ம­ண­மான பெண்­ணுடன் கடந்த ஐந்து
வருட கால­மாக இர­க­சிய தொடர்பு கொண்டு வந்­துள்ளார். வழக்கின் முறைப்­பாட்­டா­ள­ரான குறித்த பெண்ணின் கணவர் வெளி­நா­டொன்றில் தொழில் செய்து வரு­வ­தாக ஆரம்­ப­ கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்துள்ளது.

இதே­வேளை, முறைப்­பாட்­டா­ள­ருக்கு வேறு சில­ருடன் இர­க­சிய தொடர்பு இருப்­ப­தாக சந்­தேக நப­ருக்கு தெரிய வந்­துள்­ளது. இதனை அடுத்து தொலை­பேசிக் கட்­டணம் செலுத்­த­வென முறைப்­பாட்­டா­ளரை சந்­தேக நபர் அழைத்துச் சென்று தனது கடையின் களஞ்­சி­ய­சா­லையில் வைத்து அவரை தாக்­கி­யுள்­ள­துடன் நிர்வாணக் கோலத்தில் அவரைப் புகைப்­படம் எடுத்­ததுடன் பின்னர் நிர்­வாணப் படத்தை இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப் போவ­தாக அச்­சு­றுத்­தி­யுள்ளார்.

இது தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட பெண் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­ததையடுத்து பொலிஸார் சந்­தேக நபரை கைது செய்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com