Thursday, October 10, 2013

சி. வி-க்கு சிக்கல் ஆரம்பம். உருவப்பொம்மைகளும் எரிப்பு!

ததேகூ உறுப்பினர்களால் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரனின் உருவங்கள் தீயிடப்பட்டதாக அறிய வருகின்றது. ஜனாதிபதி முன்னால் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை தொடர்பாக தமது அதிருப்தியை அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சத்தியப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்ட ததேகூ தலைவர் ச ம்பந்தன், சுமந்திரன் எம்பி ஆகியோரின் உருவங்களையும் அவர்கள் கொளுத்தியுள்ளனர். வடமாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இங்கு ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ததற்காக இந்த எதிர்ப்பை தாங்கள் காட்டுவதாக தெரிவிக்கின்றபோதும் , சம்பந்தனுக்கு எதிராக கூட்டமைப்பினுள் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் அமைச்சுப்பதவிகளை பிரிவிடுதலில் ஏற்பட்ட முரண்பாடுகளே என்பது யாவரும் அறிந்தவிடயம்.

அமைச்சுப்பதவிகளுக்காக என்று தமது காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளாமல் பதவிப்பிரமாணம் என்ற கோஷத்தை கையிலெடுத்துள்ள அவர்கள் எந்த சத்தியப்பிரமாணத்தை விக்னேஷ்வரன் செய்துகொண்டாரோ அதே பிரணாத்தையே பதவிகளை பெற்றுள்ள அனைவரும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments :

Anonymous ,  October 10, 2013 at 3:31 AM  

எமது நாட்டு ஜனாதிபதிக்கு முன் சத்திய பிரமாணம் செய்வதை அரசியலாக்கி, அதில் இலாபம் தேடும் கீழ்த்தரமான கூட்டம்,
ஏன் அந்தத் தேர்தலில் பங்கு பற்றினார்கள்?
ஏன் பதவிகளை ஏற்றுகொண்டார்கள்??
ஏன் அமைச்சர் பதவிகளுக்காக கனவுடன் காத்திருந்தார்கள்???

அரசாங்கத்தின் தேர்தல்களையும் பகிஸ்கரித்து விட்டு, பதவிகளையும் தூக்கி எறிந்து விட்டு தன்மானத்துடன், மரியாதையுடன் தங்களின் வேலைகளை பார்க்க வேண்டியது தானே.

இவ்வளவு காலமாக எதிர்ப்பு அரசியலை மட்டும் நடத்தி என்னத்தை கண்டோம்?

முற்பது வருட காலம் மண்ணையும், மக்களையும் நாசமாகி, சீரழித்து, சிதைத்து,
தங்களின் வாழ்க்கையை மட்டும் வளப்படுத்த பழகிக்கொண்ட தமிழீழ கூட்டம் இன்றும் திருந்த வில்லை. மீண்டும் பழைய நரக வாழ்வுக்கு எம்மை அழைக்க நினைக்கிறார்கள.

தமிழ் மக்களே, கள்ள நோக்குடைய கயவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.

Anonymous ,  October 10, 2013 at 3:44 AM  

"அமைச்சுப்பதவிகளுக்காக என்று தமது காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளாமல் பதவிப்பிரமாணம் என்ற கோஷத்தை கையிலெடுத்துள்ள அவர்கள் எந்த சத்தியப்பிரமாணத்தை விக்னேஷ்வரன் செய்துகொண்டாரோ அதே பிரணாத்தையே பதவிகளை பெற்றுள்ள அனைவரும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது."
This the reality.

Unfortunately, Tamil people have elected some useless idiots as members of PC.
Those are very selfish and useless.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com