அரசாங்கம் தாம் உருவாக்கிய பிள்ளையாம் அதை தவறான வழியில் செல்ல இடமளிக்க மாட்டாராம் கம்மன்பில!
அரசாங்கம் தாம் உருவாக்கிய பிள்ளை எனவும் அது தவறான வழியில் செல்வதற்கு இடமளிக்க முடியாது என ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் பிரதிச் செயலாளர் உதய கம்மன்பில ஹோமாகம பகுதியில் நடைபெற்ற நிகழ் வொன்றில் தெரிவித்துள்ளார்.
கெசினோ விவகாரத்தில் ஹெல உறுமய கட்சியும் அரசாங்கமும் முரண்படுவதாக தற்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. இது நாம் உருவாக்கிய அரசாங்கம் என்பதாலேயே அந்த நடவடிக்கையை தாம் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காதவர்களே பெரும்பாலும் தற் போது அமைச்சரவையில் இருப்பதாகவும், "இந்த அரசாங்கம் எமது பிள்ளையை போன்றது. ஆகையால் அது தவறான வழியில் செல்வதற்கு இடமளிக்க முடியாது" எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சரி பிழைகளை சுட்டிக் காட்ட எதிர்க்கட்சியொன்று இல்லாமல் போயுள்ளது. ஆகையால் இன்று நாமே அந்த கடமையையும் நிறைவேற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment