வாசு கட்சியின் தேசிய அமைப்பாளர் ஐதேகவுக்குப் பாய்கிறார்...!
தேசிய மொழிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமை ச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் விஜேசுந்தர அக்கட்சியைக் கைவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவின் கரங்களால், ஸ்ரீகொத்த தலைமையகத்தில் அவர் அக்கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர், தங்கள் தலைவரின் ஒழுங்கற்ற செயற்பாடு காரணமாகவே தான் அக்கட்சியை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment