Monday, October 7, 2013

வடமாகாண முதலமைச்சருக்கு பிள்ளையார் பரிசு கொடுத்த ஜனாதிபதி!

வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை யில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட வைபவம் நிறை வடைந்ததும் வடமாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மரத்தினால் செய்யப்பட்ட அழகிய பிள்ளையார் சிலை ஒன்றினை அன்புப் பரிசாக வழங்கி யுள்ளார்.

இந்தப் பரிசினை சற்றும் எதிர்பார்க்காத முதலமைச்சர், சந்தோஷத்தில் பூரித்துப்போனதுடன் சத்தியப்பிரமாணம் நிகழ்ச்சி முடிவடைந்து மண்டபத்தில் இருந்து வெளியேறும் வரை மரத்தால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை தனது கையிலேயே வைத்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com