Monday, October 7, 2013

விலக வேண்டாம் நீங்கள்....! தொடர்ந்து இருங்கள்... ஸ்ரீகொத்தவில் ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து அக்கட்சியில் இருக்க வேண்டும் எனக் கூறி, அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கோட்டை ஸ்ரீகொத்த தலைமையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க நிற்க வேண்டுமென்றும், சூழ்ச்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு இன்னும் சில நிமிடங்களில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, நேற்று முன் தினம் (05) மாத்தறையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இரகசிய அறிக்கையொன்று முன்வைத்து அதுபற்றிய கருத்துக்களையும் பிரேரணைகளையும் தெரிந்துகொள்வதற்கு ஆயத்தமாகவுள்ளதாகவும் அறியவருகின்றது.

அங்கு கட்சியின் தலைமைத்துவம் மற்றும் மேலும் பதவிகள் பலவற்றை மாற்றத்திற்குள்ளாக்கும் பிரேரணையும் முன்வைத்து, அதுபற்றி அலசவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com