Friday, October 18, 2013

பரீட்சார்த்த ரயில் சேவை ஆனையிறவு வரை நீடிப்பு!

ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுக் கடந்த மாதம் 14 ஆம் திகதி, கிளிநொச்சி வரை ரயில் சேவை விரிவாக்கப்பட்டதுடன் தற்போது ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து பரீட்சார்த்த ரயில் சேவைகள் ஆனையிறவு வரையில் நடைபெற்று வருகின்றன.

கிளிநொச்சியிலிருந்து ஆனையிறவு வரையான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்தே இந்த பரீட்சார்த்தமான ரயில் சேவை கிளிநொச்சியிலிருந்து ஆனையிறவு வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது பளை வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் அந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com