Tuesday, October 8, 2013

கட்சியை வழிநடத்த தகுதியானவர் இருந்தால் நிரூபியுங்கள், நான் பதவி துறக்கின்றேன் - ரணில்

ஜக்கிய தேசிய கட்சியை வழிநடத்த தகுதியானவர் என நிரூபிக்கும் எந்தவொரு கட்சி அங்கத்தவரிடமும் ஐ.தே. கட்சி தலைமையை வழங்க ரணில் விக்கிரமசிங்க தயாராக இருப்பதாக ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அங்கத்தவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர்கள் கட்சித் தலைமைக்கு தகுதியானவர்களாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு ஒருவர் இருப்பாராயின் விக்கிரமசிங்க கட்சித் தலைவர் பதவியைத் துறக்க விருப்பமாக உள்ளார்' எனவும் ஊடகவியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை அறிவித்தார். அவர் கட்சியை ஒற்றுமைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தக் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com