Thursday, October 31, 2013

குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! முவர் கைது!

டெல்லியில் ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கும் நிறைய பேர் அருகிலுள்ள அரியானா மாநிலம் குர்கானில் தங்கியுள்ளனர்.

நேற்று இரவு அங்கு நடந்த பிறந்த நாள் இரவு நிகழ்ச்சியில் பல கால் சென்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இரவு நிகழ்ச்சி முடிந்ததும் விடியற்காலை 19 வயதான இளம் பெண் ஒருவர் கால்நடையாக வீடு நோக்கி சென்றார்.

அப்போது அவருக்கு தெரிந்த தினேஷ் என்ற நண்பர், அந்த இளம் பெண்ணிடம் மோட்டர் சைக்கிளில் வீட்டில் விட்டு விடுவதாக கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட அந்த இளம்பெண், மோட்டர் சைக்கிளில் அவருடன் சென்றுள்ளார். வீடு சென்றபோது தினேஷின் இரு நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். பிறகு அவர்கள் அனைவரும் அங்கு குளிர்பானம் அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அந்த இளம்பெண்ணிடம் கொடுத்துள்ளனர். இதில் மயங்கிய அந்த இளம்பெண்ணை மூவரும் கெடுத்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிறகு நடந்த விபரம் குறித்து போலீசாரிடம் அந்த இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கையிலும் அந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட தினேஷ், நவீன் மற்றும் சத்யதேவ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் சத்யதேவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2 comments :

Anonymous ,  October 31, 2013 at 1:02 PM  

This is what we see in their movies,teledrams,so the society is easily adopting the worst things into their lives.it is regrettable that India is playing a big role in SEX crimes.Why not you wipe it out.

Anonymous ,  October 31, 2013 at 6:09 PM  

Kaddippidi Kaddippidi Da En thimir adanga Kaddippidi da.How this type of sexy songs will change the minds of youngsters as sex maniacks.commercially encouraging the younger generation to fall into the hell.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com