Thursday, October 31, 2013

தனது இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 வருடங்கள் சிறை !

தமது மகள்கள் இருவரை கொடூரமான முறையில் பாலி யல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய தந்தை ஒருவருக்கு, 120 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அனுரா தபுரம் மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹொரவப்பத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவருக்கே, அனுராதபுரம் மேல்நீதிமன்ற நீதிபதி, ஹேமா ஸ்வர்ணாதிபதி இவ்வாறு தீர்ப்பளித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட இரு மகள்களுக்கும் தலா 10 இலட்சம் படி, 20 இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்க வேண்டும் எனவும், அதனை வழங்கத் தவறின் மேலும் 4 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட் டுள்ளது.

இதுதவிர மேலும் 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு அதனை கட்டத்தவறின் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com