Tuesday, October 15, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிரான வழக்கு 30ம் திகதி விசாரணைக்கு!

அண்மையில் நடைபெற்று முடிந்த வட மாகாணசபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட ப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிரான வழக்கு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த விஞ்ஞாபனம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனத் தெரிவித்தும், நாட்டைத் துண்டாட முனைப்பு காட்டுவதாகவும் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டிருந்ததுடன் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com