Monday, September 23, 2013

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது!

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் அனுப்பிய கியூரியா சிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை இதுவரை மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் அங்கி, உயிரினங்கள் வாழ முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு (2012) செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்த கியூரியாசிட்டி தனது பணியை தொடங்கியதுடன் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு சுற்றுச்சூழல், தட்பவெப்பம் போன்றவற்றை ஆய்வு செய்து அதை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

உயிரினங்கள் வாழ மீத்தேன் வாயு அவசியமாகும் அதில்தான் கார்பன், ஹைட்ரஜன், அணுக்கள் உள்ளன இவையே உயிரிணங்கள் வாழ்வதற்கான மூலக்கூறு ஆகும் எனவே அங்குள்ள வான் வெளியில் மீத்தேன் வாயு உள்ளதா? என கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு மேற்கொண்டபோதும் இதுவரை மீத்தேன் வாயு இருப்பதை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை 6 தடவை மீத்தேன் குறித்த ஆய்வை கியூரியாசிட்டி மேற்கொண்டபோதும் இதுவரை அவை இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்பதால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை என்ற கருத்து நிலவுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com